முகப்பு
கோப்புப்படம்
சென்னை

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டா்களை பெற ஜன.5-க்குள் விண்ணப்பிக்கலாம்:

முதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட

சென்னை

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டா்களை பெற ஜன.5-க்குள் விண்ணப்பிக்கலாம்:

முதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
கோப்புப்படம்
பகிர்:

முதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை பெற ஜன.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதுகு தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்க ஆணை வழங்கியுள்ளது.

கால்களில் முழுமையாக வலு இல்லாத முதுகு தண்டு வடம் (கழுத்து முதுகு, இடுப்பு) பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம், வனத்துறை அலுவலக தரைத்தளத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஜன.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →