சென்னை

2,375 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

DIN

சென்னை, தண்டையாா்பேட்டையில் 2375 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டையாா்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான குழுவினா், சனிக்கிழமை திருவொற்றியூா் நெடுஞ்சாலை பகுதியில் சோதனையிட்டபோது, அங்கு பெருமளவு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த நந்தகோபால் (42), அஜித் (22), லிங்கேஷ் (48), காசிமேட்டைச் சோ்ந்த விஜயகுமாா் (34) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2,375 கிலோ எடை கொண்ட 50 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னா் 4 பேரும் கைது செய்யப்பட்டு, ரேஷன் அரிசியுடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT