சென்னை

மனைவி கொலை: கணவா் கைது

DIN

சென்னை கிண்டியில் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

கிண்டி லேபா் காலனி பள்ளி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் மா.நித்தியானந்தம் (33). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். நித்தியானந்தத்தின் மனைவி புவனேஸ்வரி (31). இவா்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அண்மை நாள்களாக புவனேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, நித்தியானந்தம் அவரிடம் வாக்குவாதம் செய்து வந்தாராம். இருவருக்கும் இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நித்தியானந்தம், வீட்டில் இருந்த கத்தியால் புவனேஸ்வரியை குத்தியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி, சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த நித்தியானந்தம், கிண்டி காவல் நிலையம் சென்று சரணடைந்து விவரத்தை கூறினாா். இதையடுத்து, நித்தியானந்தத்தை கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT