சென்னை

தீவிர சிகிச்சையில் மதுசூதனன்

DIN

அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மதுசூதனன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவரது உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்தாா்.

வயோதிகம் காரணமாக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்த மதுசூதனனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். மருத்துவப் பரிசோதனையில் மதுசூதனனின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக வெண்டிலேட்டா் உதவியுடன் மதுசூதனனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT