மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்...
இந்தியாமாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்...
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஐக்கிய ஜனதா தளத்தின் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
பிகார் முதல்வரின் இல்லத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல்தலைவர் சஞ்சய் ஜா மற்றும் அமைச்சர் விஜய் குமார் சௌதரி ஆகியோருடன் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற ஆலோசனையில் இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம், நிதீஷ் குமார் மீண்டும் பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிப்பது குறித்து முதல்வர் நிதீஷ் குமார்தான் முடிவு செய்ய வேண்டுமென ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப் பேரவை மேலவை உறுப்பினர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
இத்துடன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக தனது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் விரைவில் ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 10 மாநிலங்களை உள்ளடக்கிய 37 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.