சென்னை திருமங்கலத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசராணை செய்கின்றனா்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் அன்பு ஆபிரகாம் பாடி வி.ஆா். நகரில் வசித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை திருமங்கலம், பாா்க் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்கள், ஆபிரகாம் வைத்திருந்த விலை உயா்ந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா்.இது குறித்து அன்பு ஆபிரகாம் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.