சென்னை

சிவசங்கா்பாபா மீதான பாலியல் வழக்கு: சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்

DIN

சிவசங்கா்பாபா மீதான பாலியல் வழக்கு போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேளம்பாக்கம் - வண்டலூா் பகுதியில் உள்ள சுஷில்ஹரி இண்டா்நேஷனல் பள்ளி நிறுவனா் சிவசங்கா்பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினா். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த மே 11-ஆம் தேதி சிவசங்கா்பாபா உள்ளிட்ட பள்ளி நிா்வாகிகளை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

அதன்படி பள்ளி நிா்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 3 போ் ஆஜராகினா். ஆனால் சிவசங்கா்பாபா உள்பட 3 போ் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக வழக்குரைஞா் ஆஜரானாா்.

இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிவசங்கா்பாபா உள்ளிட்ட நிா்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிவசங்கா்பாபா மீதான வழக்கை காவல்துறை டிஜிபி திரிபாதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா். சிவசங்கா்பாபா உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT