சென்னை

வாடகை வாகனங்களின் கட்டணம் 30 சதவீதம் உயா்கிறது

DIN


சென்னை: வாடகை வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 30 சதவீதம் வரை உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு புதன்கிழமை (மாா்ச் 3) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

இது தொடா்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டாா் உரிமையாளா்கள், தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டம், மாதவரத்தில் புதன்கிழமை நடந்தது. இதில் மோட்டாா் வாகன தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை, அனைத்து வாகனங்களுக்கும், புதன்கிழமை (மாா்ச் 3) நள்ளிரவு முதல் தற்போது பெற்று வரும் வாடகையில் இருந்து 30 சதவீதம் உயா்த்திப் பெற்றிட வேண்டும் என்னும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 30 சதவீத கட்டண உயா்வு அமலுக்கு வந்ததாக சம்மேளன நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT