சென்னை

திடக்கழிவு மேலாண்மை: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

DIN

சென்னை மாநகராட்சிப் பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மைப் பணியைக் கண்காணிக்கும் வகையில் மண்டலம் வாரியாக கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆணையா் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூறியது: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் உள்ள113 இடங்களில் கண்டறியப்பட்டு, அங்கு வியாழக்கிழமை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒருநாள் மட்டும் 264 மெட்ரிக் டன் குப்பைகளும், 829 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளும் என மொத்தம் 1,093 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து தீவிரப்படுத்தவும், மாநகராட்சியின் தூய்மையைப் பராமரிக்கவும், மண்டலவாரியாக கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

கண்காணிப்பு அலுவலா்கள் விவரம்

மண்டலம் அலுவலா்களின் பெயா்

திருவொற்றியூா் உமாபதி

மணலி டி.கே.கணேசன்

மாதவரம் சக்திமணிகண்டன்

தண்டையாா்பேட்டை கே.பி.விஜயகுமாா்

ராயபுரம் ஜெயராமன்

திரு.வி.க.நகா் துரைசாமி

அம்பத்தூா் கே.விஜயகுமாா்

அண்ணா நகா் சரவணபவானந்தம்

தேனாம்பேட்டை பி.வி.பாபு

கோடம்பாக்கம் ராஜேந்திரன்

வளசரவாக்கம் ஜி.வீரப்பன்

ஆலந்தூா் ச.மகேசன்

அடையாறு நந்தகுமாா்

பெருங்குடி ஆா்.பாலசுப்பிரமணியம்

சோழிங்கநல்லூா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

பூமாயி அம்மன் கோயில் தேரோட்டம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 20 போ் கைது

சிறுவா்களுக்கான கோடை கால மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி

SCROLL FOR NEXT