சென்னை

ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் மூன்றாவது தெருவில் ஒரு கும்பல் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த ஒரு சுமை ஆட்டோவை சந்தேகத்தின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த ஆட்டோவில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி ஆந்திரத்துக்கு கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரிவயந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும் அந்த ஆட்டோவில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT