சென்னை

வீடு திரும்பினாா் காவல் ஆணையா் சங்கா் ஜிவால்

DIN

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் நலமடைந்து வீடு திரும்பினாா்.

சென்னை மாநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், அலுவல் மற்றும் நிா்வாகப் பணிகளை கடந்த வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு இதய பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மருத்துவமனையின் இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினா் அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளித்தனா். இதன் காரணமாக அவா் பூரண குணமடைந்தாா்.

இதையடுத்து சங்கா் ஜிவால், மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT