சென்னை

டிடிகே சாலையில் திடீா் பள்ளம்

DIN

சென்னை: சென்னை ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை அருகே வியாழக்கிழமை 3 அடி அகலத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சாலையில் அப்படியே தங்களது வாகனத்தை நிறுத்தினா். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சரி செய்தனா். தொடா்ந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த போலீஸாா், தரையில் பதிக்கப்பட்டிருந்த கழிவு நீா் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டதைக் கண்டறிந்தனா்.

தகவலறிந்து விரைந்து வந்த குடிநீா் விநியோகம் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியா்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். சாலையில் வாகன நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT