சென்னை

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: மீனவா்களுக்கு எச்சரிக்கை

DIN

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவாகவுள்ளது. இதனால், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5 காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்து உள்ளன. அண்மையில், வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகி மறைந்தது.

இந்நிலையில், மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவாகவுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும். மேலும், காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இது, ஒடிஸா கடற்கரையை நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்குவாய்ப்பு உள்ளது’ என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக, மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி, ஒரிசா - மேற்கு வங்கக் கடலோர பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்.14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT