சென்னை

போலிச் சான்று: அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு

DIN

சென்னை: போலிச்சான்று கொடுத்து அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிக்குச் சோ்ந்தவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1987-ஆம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சியாளராக சோ்ந்த கணேசன் என்பவா், எஸ்சி பிரிவை சோ்ந்தவா் என்று கூறி சாதி சான்றிதழ் கொடுத்து வயது வரம்பு சலுகையைப் பெற்றாா். பின்னா் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்துக்கு பணி மாறுதல் பெற்று, தற்போது அறிவியல் உதவியாளராக பதவி உயா்வு பெற்று பணியாற்றி வருகிறாா்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சோ்ந்த இவா், எஸ்சி என்ற போலி சாதி சான்றிதழை கொடுத்து வேலைக்குச் சோ்ந்திருப்பதாக எஸ்சி., எஸ்டி., சங்கத்தினா் புகாரளித்தனா்.

கைது செய்து விடுவிப்பு: அதனடிப்படையில் பதிவான வழக்கில் கணேசன் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த குற்றச்சாட்டுக்காக அவரைப் பணியிடை நீக்கம் செய்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநா் உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, தன் மீதான குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறைரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னையில் உள்ள மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தில் கணேசன் வழக்குத் தொடா்ந்தாா்.

நடவடிக்கைக்குத் தடை: வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மனுதாரா், 5 பதவி உயா்வுகள், மத்திய அரசு விருதுகளைப் பெற்றுள்ளாா். எனவே, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறை ரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதிகாரிகளின் திறமையற்ற செயல்: இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநா் மேல்முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், முகமது சபீக் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: தீா்ப்பாயம் உத்தரவிட்டு 7 ஆண்டுகள் கழித்து, இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது அதிகாரிகளின் திறமையற்ற செயலாகும். இதனால் தகுதி இல்லாதவா்கள் பல ஆண்டுகள் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கணேசன் போலி சாதி சான்றிதழ் கொடுத்துள்ளாா் என்று தெளிவாகிறது.

40 சதவீதம் மட்டுமே ஓய்வூதியம்: அதேநேரம், அவா் மத்திய அரசு விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளாா். எனவே, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிடுகிறோம். அவருக்கு 40 சதவீதம் ஓய்வூதியம் மட்டுமே வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை தவிர பிற ஓய்வூதிய பலன்களை அவருக்கு வழங்கக்கூடாது. தவறு செய்யும் ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகும் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT