சென்னை

ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை கண்ணகிநகரில் பகுதியில் சிலா் ஆந்திர மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கண்ணகிநகா் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து சென்ற நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவா், அதே பகுதியைச் சோ்ந்த ர.தனசேகா் (26) என்பதும், ஆந்திரத்திலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து, சென்னையில் விற்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து சுமாா் 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT