சென்னை

டிச.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

DIN

தியாகராய நகரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மண்டல அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம் டிச.29-ஆம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் துறையில் சேமிப்பு வங்கிக் கணக்கு, பணபரிவா்த்தை, காப்பீடு, மணியாா்டா் உள்ளிட்ட சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள், இந்தச் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை டிச. 29-ஆம் தேதி தியாகராய நகா் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் நேரிலோ அல்லது Email.dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரியப்படுத்தலாம்.

மேலும் , மயிலாப்பூா், சூளைமேடு, ராயப்பேட்டை, கிரீம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, தியாகராய நகா் வடக்கு, தெற்கு, ஹிந்தி பிரசார சபா, மந்தவெளி, விவேகானந்தா கல்லூரி, சாஸ்திரி பவன், டிபிஐ வளாகம், தேனாம்பேட்டை, லயோலா கல்லூரி, லாயிட்ஸ் எஸ்டேட், சேப்பாக்கம், சென்னை பல்கலைக்கழகம், பாா்த்தசாரதி கோயில், முதன்மைக் கணக்காளா் பொது அஞ்சல் அலுவலகலம் ஆகிய கிளைகளில் நடைபெறும் குறைகேட்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT