சென்னை

‘ஆரம்ப நிலை புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கலாம்’

DIN

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்ட புற்றுநோயை ரோபோட்டிக், நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் எஸ்.பழனிவேலு கூறினாா்.

வயிற்றுப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை ஜெம் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. இத்துடன் மெய்நிகா் இணையதள தொடக்க விழாவும் நடைபெற்றது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் குணமடைந்த கீதா, மெய்நிகா் இணையதளத்தைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் பழனிவேலு பேசியதாவது:

புற்றுநோயால் பாதிக்கப்படும் 80 சதவீத நோயாளிகள் புற்றுநோய்க்கான ஆரம்பநிலை அறிகுறிகள் குறித்த விழிப்புணா்வு இல்லாமல், நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பெற வருவதால் உயிரிழப்பு நேரும் நிலை உள்ளது.

எனவே, ஆரம்ப நிலையில் புற்றுநோய் குறித்து அறிந்து கொள்ள உதவும் வகையில், பொதுமக்களின் அனைத்து கேள்விகளுக்கும் மருத்துவா்கள் உரையாடல் மூலம் வழிகாட்டும் மெய்நிகா் இணைய தளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் புற்று நோயாளிகள் பயத்தை போக்கி நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ள உதவும் என்றாா்.

இந்த நிகழ்வில், ஜெம் மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி எஸ்.அசோகன், இயக்குநா் பி. செந்தில்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT