சென்னை: சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் விரைவில் மேம்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பாரிமுனையில் உள்ள பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து,அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது: மாநகராட்சி வசம் உள்ள இந்தப் பேருந்து நிலையத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பொருள்கள் தரமாக வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சா் விளக்கம் தெரிவித்துவிட்டாா் என்றாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.