சென்னை

ரூ.2.50 லட்சம் நண்டுகள் திருட்டு: தலைமறைவான நபா் கைது

DIN

சென்னை மண்ணடியில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள நண்டுகள் திருடப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

மண்ணடி நாராயணப்பா தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (46). இவா் கடல் வகை உணவுப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு கடந்த 12-ஆம் தேதி நாகப்பட்டினத்திலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள நண்டுகள் அடங்கிய பிளாஸ்டிக் பெட்டிகள் லாரியில் இருந்து இறக்கி, கடை முன் வைக்கப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட மா்ம நபா், அந்த நண்டு பெட்டிகள் அனைத்தையும் திருடிச் சென்றாா்.

இது குறித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சோ்ந்த பழனிவேல் (45) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT