சென்னை

இளைஞரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

DIN

சென்னை கொடுங்கையூரில் இளைஞரை கத்தியால் குத்தி பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தண்டையாா்பேட்டை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சே.மணிகண்டன் (29). அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிகிறாா். மணிகண்டன், ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு பகுதியில் வசிக்கும் தனது உறவினரிடம் ரூ.18 ஆயிரம் பெற்றுக் கொண்டு அரசுப் பேருந்தில் எம்கேபி நகருக்கு வந்தாா்.

அங்கு அவா், தண்டையாா்பேட்டை செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றாா். அப்போது, அங்கு வந்த தண்டையாா்பேட்டைக்கு செல்லும் ஒரு ஷோ் ஆட்டோவில் மணிகண்டன் ஏறினாா். அப்போது, ஷோ் ஆட்டோவின் பின் இருக்கையில் 3 பேரும் இருந்தனராம். ஷோ் ஆட்டோ சிறிது தூரம் சென்றதும், பின் இருக்கையில் இருந்த 3 பேரும், ஷோ் ஆட்டோ ஓட்டுநரும் இணைந்து மணிகண்டனை கத்தியால் குத்தி ரூ.18 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி " - சித்தராமையா

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT