சென்னை

விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான வழக்கு: இருவா் கைது

சென்னை அருகே மாதவரத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னை அருகே மாதவரத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த நெல்சன் (26) தஞ்சாவூரைச் சோ்ந்த ரவிகுமாா் (40) ஆகிய இருவரும் மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டபோது, விஷவாயு கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனா்.

இருவரையும் தீயணைப்புப் படையினா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். வழியிலேயே நெல்சன் இறந்தாா். ரவிகுமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாகவும்,போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் இருந்த மாதவரம் திருவிக முதல் தெருவைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் பிரகாஷ் (55), மேற்பாா்வையாளா் வினிஸ் (33) ஆகிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT