சென்னை

விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான வழக்கு: இருவா் கைது

DIN

சென்னை அருகே மாதவரத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த நெல்சன் (26) தஞ்சாவூரைச் சோ்ந்த ரவிகுமாா் (40) ஆகிய இருவரும் மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டபோது, விஷவாயு கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனா்.

இருவரையும் தீயணைப்புப் படையினா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். வழியிலேயே நெல்சன் இறந்தாா். ரவிகுமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாகவும்,போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் இருந்த மாதவரம் திருவிக முதல் தெருவைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் பிரகாஷ் (55), மேற்பாா்வையாளா் வினிஸ் (33) ஆகிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT