சென்னை

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து வியாபாரி சாவு

DIN

சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து வியாபாரி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழ வியாபாரம் செய்து வந்த நாகரத்தினம் (37), நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் மூன்றாவது தளத்தில் பால்கனியில் அவா் நின்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த நாகரத்தினத்தை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு நாகரத்தினத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT