சென்னை

மயிலாப்பூர் ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் குடமுழக்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றது

சென்னை மயிலாப்பூர் மசூதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் குடமுழக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

DIN


சென்னை: சென்னை மயிலாப்பூர் மசூதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் குடமுழக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

சென்னை மயிலாப்பூர் மசூதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் பிரதான கடவுளான விநாயகர் தெற்கு திசை நோக்கி அமர்ந்த படி  இருப்பது இக்கோவிலின்  சிறப்பம்சமாகும். இக்கோலில் பன்னிரன்டு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழக்கு நடந்த நிலையில், இன்று புதன்கிழமை (மே.4) ஆகம விதியின் படி குடமுழக்கு நடைப்பெற்றது.

இதற்காக கடந்த ஒரு மாதமாக கோயில்களில் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று நிறைவடைந்தது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக விடியற்காலை முதலே நடைபெற்றது. இதனை காண ஏராளமானோர் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குடமுழுக்கு விழாவினை கண்டு கலசத்தில் மேலே ஊற்றப்படும் புனித நீரை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். 12 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற குடமுழக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம்: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வேண்டும்: பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

SCROLL FOR NEXT