சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பலத்த மழை காரணமாக, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்த ஜோதி வெளியிட்டாா்.
சென்னையில் தொடா் மழை காரணமாக, கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மழை குறைந்ததால், பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை வழக்கம் போல் செயல்பட்டன. மீண்டும் வியாழக்கிழமை மாலை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.