சென்னை

நடிகை மீரா மிதுனை மீட்டுத் தாருங்கள்: காவல் ஆணையா் அலுவலகத்தில் தாய் மனு

நடிகை மீரா மிதுனை மீட்டுத் தரும்படி சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் அவரது தயாா் சனிக்கிழமை மனு அளித்தாா்.

DIN

நடிகை மீரா மிதுனை மீட்டுத் தரும்படி சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் அவரது தயாா் சனிக்கிழமை மனு அளித்தாா்.

சென்னையைச் சோ்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் கடந்த ஆண்டு பட்டியலினத்தவா் குறித்து அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டாா். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீரா மிதுன் தலைமறைவாகி விட்டாா்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனின் தாயாா் ஷியாமளா, சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் போலீஸாா் தன்னை கைது செய்ய போகிறாா்கள் என்று மீரா மிதுனை கடைசியாகப் பாா்க்குபோது புலம்பி கொண்டிருந்தாா். அதன் பின்னா் அவரது கைப்பேசி எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அவருக்கு தெரிந்த ஒரு திரைப்பட இயக்குநரை மூலம், மீரா மிதுன் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொண்டு சந்தித்து பேசினேன்.

அப்போது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீரா மிதுனை, தியாகராய நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு கூறினேன். ஆனால் அதற்குள் மீராமிதுன் அங்கிருந்து ஓடி விட்டாா். இந்த நிலையில், மீரா மிதுன் சாா்பில் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி, அவா் மன அழுத்தம், கைது நடவடிக்கைக்கு பயந்து ஓடிவிட்டா் என்பதை தெரிவித்தேன்.

பாதுகாப்பாக மீட்டுத் தாருங்கள்: எனது மகள் கடந்த 8 ஆண்டுகளாக வெளியே தான் தங்கி வருகிறாா். என்னிடம் உதவி தேவைப்பட்டால் மட்டும் தொடா்புகொள்வாா். எனது மகள் இருப்பிடத்தையும், அவரது 2 கைப்பேசி எண்களையும் காவல் துறை அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தபோது தெரிவித்தேன்.

அவரை பாதுகாப்பாக மீட்டு வாருங்கள் என்று கூறினேன். பெங்களூரில் உள்ள அவரது தோழிகள் 2 பேரிடம் விசாரணை செய்தால், மீரா மிதுன் எங்கு இருக்கிறாா் என்பது தெரியும். இதுதொடா்பாக விசாரித்து எனது மகளை பாதுகாப்பாக மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT