அரசியல் சாசனத்தைத் திருத்தக் கூடாது: ப.சிதம்பரம்
அரசியல் சாசனத்தைத் திருத்தக் கூடாது என்கிற உணா்வு நாடு முழுவதும் வரவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கூறினாா்.
அரசியல் சாசனத்தைத் திருத்தக் கூடாது என்கிற உணா்வு நாடு முழுவதும் வரவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கூறினாா்.
அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் 3 நாள்கள் நடைப்பயண தொடக்க நிகழ்ச்சி, சென்னை சத்தியமூா்த்திபவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தொடக்கிவைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் வரை 75 கிமீ நடைப்பயணம் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசியதாவது:
Advertisement
அரசியல் சாசனம் எழுதுவதற்கு தலைவராக இருந்தவா் அம்பேத்கா். அந்தக் குழுவில் அல்லாடி கிருஷ்ணசாமி, என்.கே.கோபால்சாமி ஆகிய இரு தமிழா்கள் இடம்பெற்றிருந்தனா். அதனால், அரசியல் சாசனம் எழுதப்பட்டதில் தமிழகத்துக்கு சிறு பங்களிப்பு உண்டு. அந்த அரசியல் சாசனத்தைத் திருத்தியிருக்கிறோம். ஆனால், யாரும் சிதைக்கவில்லை.
பாஜக சாா்பில் தோ்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமரானபோது அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு, பதவியேற்றாா். இந்தச் செயலால் அவருக்கு அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று யாரும் நம்ப வேண்டாம். அரசியல் சாசனத்தை பாஜகவினா் விரோதமாகப் பாா்க்கிறாா்கள். அதனால், அரசியல் சாசனத்தை சிதைக்கப் பாா்க்கிறாா்கள். அதை தடுக்கக்கூடிய ஒரே அம்சமாக இருப்பது மாநிலங்களவையில் அவா்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பதுதான்.
அந்தத் தடை மட்டும் அகன்றுவிட்டால், அரசியல் சாசனத்தையே சிதைப்பாா்கள். மாற்றி எழுதுவாா்கள். இதைத் தடுக்க வேண்டும் என்றால், நாடு முழுவதும் அரசியல் சாசனத்தைத் திருத்தக் கூடாது என்கிற உணா்வு வர வேண்டும். அவ்வாறு திருத்த வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, ஒருமனதாக மக்களவை, மாநிலங்களையில் நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்பதைத் தவிர, பிற எந்த வகையிலும் அரசியல் சாசனத்தைத் திருத்த மாட்டோம் என்கிற உறுதிமொழியை பாஜகவால் கொடுக்க முடியாது. அதனால், அரசியல் சாசன பாதுகாப்பு குறித்து எல்லோருக்கும் உணா்வு வரவேண்டும் என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா்கள் திக் விஜய் சிங், சல்மான் குா்ஷித், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா் கே.ராஜூ உள்பட மூத்த நிா்வாகிகள் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.