முகப்பு
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தரமான நம்பர் 1 அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

சங்ககிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:37 PM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - ENS
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:38 PM

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரத்தில் விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மளிகைக் கடைகளில் எப்படி அரிசி தரமாக இருக்கிறதோ அதே தரத்தில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும். இனி நீங்கள் கடைக்கு சென்று காசு கொடுத்து அரிசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ரேஷன் கடைகளிலே தரமான அரிசி கிடைக்கும். கொடுப்போம். எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. ஏழைகளுக்கான இந்த திட்டத்தை அதிமுக நிச்சயம் நிறைவேற்றியே தீரும். அதேபோல எண்ணெய் மற்றும் பருப்பும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

Advertisement

அதேபோல வாக்குறுதிகளில் சொன்னபடி அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், இலவச பிரிட்ஜ் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகத் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்" என்று பேசியுள்ளார்.

summary

High-quality Grade 1 rice will be provided at ration shops: EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.