தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம் என்று மக்களவையில் அமித் ஷா பதிலுரையாற்றி வருகிறார்.
நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மக்கள் தொகை வேறுபாடு அதிகமாக உள்ளதால் மறுவரையறை என்பது மிகவும் முக்கியம் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரை அளித்திருக்கிறார்.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின் நிறைவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரை ஆற்றி வருகிறார்.
மக்களவையில் இன்று மாலை 6.30 மணியளவில் அமித் ஷா அளித்த பதிலுரையில், மகளிர் நலனுக்காகவே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு நிறுத்தப்பட்டது. அதனால்தான், தற்போது மகளிர் இட ஒதுக்கீட்டை, மக்களவைத் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
Advertisement
நாட்டில் உள்ள சில மக்களவைத் தொகுதிகளில் மக்கள் தொகை சில லட்சங்கள்தான் உள்ளன. ஆனால், வேறுசிலவற்றில் 45 லட்சங்கள் வரை மக்கள் தொகை உள்ளது. எனவே, தொகுதிகளில் மக்கள் தொகை வேறுபாடு அதிகமாக இருப்பதால்தான் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மகளிர் நலனுக்காகவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பட்டியலின மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன.