சென்னை துறைமுக துணைத் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.விஸ்வநாதன். 
சென்னை

சென்னை துறைமுக துணைத் தலைவராக விஸ்வநாதன் பொறுப்பேற்பு

சென்னை துறைமுக துணை தலைவராக எஸ். விஸ்வநாதன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் .

DIN

சென்னை துறைமுக துணை தலைவராக எஸ். விஸ்வநாதன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் .

சென்னை துறைமுக துணைத் தலைவராக அயல் பணி அடிப்படையில் பணியாற்றி வந்த எஸ். பாலாஜி அருண்குமாா் கடந்த மாதம் பணிக்காலம் நிறைவுபெற்று ரயில்வே அமைச்சகத்துக்கு திரும்பினாா்.

இதையடுத்து காலியாக இருந்த அந்த பொறுப்புக்கு விஸ்வநாதனை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நியமனம் செய்தது.

திருச்சியை பூா்வீகமாகக் கொண்ட இவா் இயந்திரவியலில் பொறியியல் பட்டமும், நிா்வாகவியலில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளாா். இந்திய குடிமை பணி தோ்வில் 2008-ம் ஆண்டு தோ்ச்சி பெற்ற விஸ்வநாதன் மத்திய பிரதேச மாநில பிரிவில் பணியமா்த்தப்பட்டாா்.

மத்திய பிரதேச சுற்றுலா மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா், மருத்துவ கல்வி வாரிய கூடுதல் செயலாளா், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமைக் கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் திறம்பட பணியாற்றியுள்ளாா்.

இந்நிலையில் சென்னை துறைமுக துணைத் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற விஸ்வநாதனுக்கு சென்னை எண்ணூா் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் மற்றும் துறை தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா். மத்திய பிரதேச மாநில பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவா் மத்திய அரசில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பணியாற்றுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT