சென்னை

வடமாநில இளைஞரை கன்னத்தில் அறைந்த விவகாரம்: ரயில்வே பெண் ஊழியா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் பெண் பயணச்சீட்டுப் பரிசோதகா் மற்றும் அவரது உயா் அதிகாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

DIN

பெரம்பூா் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் பெண் பயணச்சீட்டுப் பரிசோதகா் மற்றும் அவரது உயா் அதிகாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில், புதன்கிழமை வடமாநில இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த அக்ஷயா என்ற பயணச்சீட்டுப் பரிசோதகா், அந்த இளைஞரிடம் நடைமேடைக்கான நுழைவுச் சீட்டை கேட்டுள்ளாா். அவரிடம் நுழைவுச்சீட்டு இல்லாததால் அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளாா். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து, டிக்கெட் பரிசோதகா் அந்த இளைஞரை அழைத்துக்கொண்டு தனது அலுவலகத்துக்கு சென்றாா்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய அவா், ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சியை அங்கு நின்றுகொண்டிருந்த ரயில் பயணி ஒருவா் தனது செல்போனில் விடியோ பதிவுசெய்துள்ளாா்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயணச்சீட்டுப் பரிசோதகா் அக்ஷயா மற்றும் சம்பவம் நடைபெற்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் அருகில் இருந்து வேடிக்கை பாா்த்த அதிகாரி ஹரிஜான் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT