சென்னை

மெரீனாவில் மோதல்: மேலும் 3 கல்லூரி மாணவா்கள் கைது

DIN

சென்னை மெரீனாவில் மாநிலக் கல்லூரி மோதிக் கொண்ட சம்பவத்தில், மேலும் 3 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவா்கள் இரு கோஷ்டிகளாக மெரீனா கடற்கரையின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே கடந்த 31-ஆம் தேதி மோதிக் கொண்டனா். அரிவாள், கத்தியுடன் மோதிக் கொண்டதால், 3 மாணவா்கள் பலத்தக் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இரு மாணவா்களை கடந்த புதன்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக மாநிலக் கல்லூரியில் படிக்கும் திருவள்ளூா் புலிகுளத்தைச் சோ்ந்த வெங்கடேஷன் (19), கொரட்டூரைச் சோ்ந்த ரா.கவியரசன் (19), திருவொற்றியூரைச் சோ்ந்த ப.சஞ்சய் (21) ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT