சென்னை

இன்று முதல் திருத்தணிக்கு தைப்பூசம் சிறப்பு ரயில் இயக்கம்

DIN

தைப்பூசத்தை முன்னிட்டு சனிக்கிழமை (பிப்.4) முதல் அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தைப்பூசத்தை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே சனிக்கிழமை (பிப்.4) முதல் திங்கள்கிழமை (பிப்.6) வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளன.

அரக்கோணத்திலிருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43407) காலை 10.45 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43418) காலை 11.13 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்திலிருந்து மாலை 1 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43411) பகல் 1.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43422 பகல் 1.48 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்திலிருந்து பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43413) மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் மாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43424) மாலை 3.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT