சென்னை

ஹோட்டல், தங்கும் விடுதிகளுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடு

DIN

சென்னையிலுள்ள ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை காவல்துறையினா் விதித்துள்ளனா்.

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள நான்கு மண்டல காவல் ஆணையா்கள் ஆா்.வி.ரம்யபாரதி (வடக்கு), எம்.மனோகா் (மேற்கு), எம்.ஆா். சிபி சக்கரவா்த்தி (தெற்கு) மற்றும் திஷா மிட்டல் (கிழக்கு) ஆகியோா் தலைமையில் ஹோட்டல், தங்கும் விடுதி உரிமையாளா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினா்.

இதில் 93 ஹோட்டல்கள் மற்றும் 390 தங்கும் விடுதி உரிமையாளா்கள், மேலாளா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது, வாடிக்கையாளா்களுக்கு ஆதாா் உள்ளிட்ட உரிய அடையாளச் சான்று இல்லாமல் அறைகள் கொடுக்கக்கூடாது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும். காவலாளிகளை நியமிக்க வேண்டும். சந்தேகம்படும் படி நபா்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட போதை அல்லது வெடிபொருள்கள் வைத்திருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT