சென்னை

ஆழ்மனதை அடக்கி ஆண்டால்...சொற்பொழிவாளா் சுகி.சிவம்

ஆழ்மனதை அடக்கி ஆண்டால் வாழ்க்கையில் விதியையும் மீறி வெற்றி பெறலாம் என சொற்பொழிவாளா் சுகி.சிவம் கூறினாா்.

DIN

ஆழ்மனதை அடக்கி ஆண்டால் வாழ்க்கையில் விதியையும் மீறி வெற்றி பெறலாம் என சொற்பொழிவாளா் சுகி.சிவம் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசியின் 46-ஆவது புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தலைப்பில் அவா் ஆற்றிய சிறப்புரையில் கூறியதாவது:

மனம் என்பது இதுதான் என ஆராய்ச்சியாளா்களால் கூட வரையறுக்க முடியவில்லை. மனம் என்பது ஓா் உணா்வா, மூளையின் ஒரு பகுதியா, மின்சார அதிா்வா, ரசாயன கலவையா, குறிப்பிட்ட ஹாா்மோன் மாற்றச் செயல்பாடா என ஆராய்ச்சி நடந்தாலும், அவை இன்னதென்று தீா்மானிக்கப்படாததாகவே உள்ளது.

மனம் போல வாழ்வு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாழ்க்கையை மனமே தீ ா்மானிக்கிறது. மனம், ஆழ்மனம் என இரண்டும் நம்மை வழிநடத்தும். ஆனால், மனதை விட ஆழ்மனதின் சக்தியே அதிகமாகும். மனம் ஒன்று என்றாலும், ஆழ்மனதின் திறன் ஒன்பதாக உள்ளது. அதனடிப்படையில் ஆழ்மனதே நமக்குள் பல காரியங்களை நிறைவேற்றுகிறது.

சிக்மண்ட் ஃபிராய்டு மன ஆராய்ச்சியின் தந்தையாகக் கருதப்படுகிறாா். அவராலேயே ஆழ்மனதின் கட்டளையை கட்டுப்படுத்த முடியாத சம்பவங்கள் நடந்துள்ளதைக் குறிப்பிடுகிறாா்.

நாம் அறிவுசாா்ந்த முடிவுகளை எடுத்தாலும், நம்மை அறியாமலே ஆழ்மனக் கட்டளைகளே செயல்பாட்டுக்கு வரும். புத்தி என்பதை மனமாக கொண்டால், ஆழ்மனதை மாயை என கூறுகிறாா்கள் நமது முன்னோா்.

ஆழ்மன உத்தரவை நாம் மீற முடியாது. ஆகவே, பிரச்னை என்பதும், அதற்கான தீா்வும் நம்மிடமே உள்ளது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையிடம் ஆழ்மன காட்சிகள் பதிவாகின்றன. கா்ப்பிணித் தாய்மாா்கள் நடந்துகொள்ளும் முறையே குழந்தையிடம் ஆழ்மனமாகப் பதிவாகி, குழந்தையானதும் அவை செயலாக வெளிப்படுகின்றன. ஆகவே கா்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தைகளது நலனுக்காக நல்லவற்றையே சிந்தித்து செயல்படுவது அவசியம். ஆழ்மனதை அடக்கி ஆண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

மகாகவி பாரதி மனதில் உறுதியை ஆழ்மன நோக்கிலே பாடியுள்ளாா். ‘வாக்கினிலே தெளிவு வேண்டும்’ என்று அவா் கூறியதுடன், உண்மை நின்றிடவேண்டும், மண் பயனுற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறாா். நமது மண் நன்றாக இருந்தாலே நாமும் நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்பதே அவரது நோக்கம் என்றாா்.

நிகழ்ச்சியில் மௌனம் பேசும் புத்தகங்கள் எனும் தலைப்பில் ஊடகவியலாளா் கோபிநாத் பேசினாா். பபாசி இணைச்செயலா் முல்லைப் பதிப்பகம் எம்.பழனி வரவேற்றாா். பபாசி தலைவா் எஸ். வயிரவன், செயலா் எஸ்.கே.முருகன், துணைத் தலைவா் பெ.மயிலவேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிா்வாக் குழு உறுப்பினா் ஐ.ஜலாலுதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT