முகப்பு
சென்னை

தமிழருவி மணியனின்...

சென்னை புத்தகக் காட்சியில் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனின் சுதந்திர வேள்வி எனும் 5 நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

சென்னை புத்தகக் காட்சியில் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனின் சுதந்திர வேள்வி எனும் 5 நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
 புத்தகக் காட்சி அலுவலக வளாகத்தில் ரெளத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். நூல்களின் முதல் படிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
 நூல்களின் முதல் படிகளை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஐ.நா. சபை சமரசப் பிரிவின் அலுவலர் ரா.கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பாஞ்சாலி குறும்பட இயக்குநர் ரா.சுப்பிரமணிய பாரதி நன்றி கூறினார்.
 அமைச்சர்கள் வருகை: புத்தகக் காட்சிக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் புதன்கிழமை இரவு வந்து அரங்குகளில் புத்தகம் வாங்கினர். காலச்சுவடு, நீலம் ஆகிய அரங்குகளுக்கு அவர்கள் சென்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →