முகப்பு
சென்னை

துபையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 1.98 கிலோ தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து சென்னை வந்த பணிகளிடம் இருந்து ரூ. 94.14 லட்சம் மதிப்புள்ள 1.98 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:51 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

துபையில் இருந்து சென்னை வந்த பணிகளிடம் இருந்து ரூ. 94.14 லட்சம் மதிப்புள்ள 1.98 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து விமான நிலைய சுங்க ஆணையா் மேத்யூ ஜாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுங்கத் துறைக்கு வந்த உளவுத் தகவலின் அடிப்படையில் துபையில் இருந்து புதன்கிழமை சென்னை வந்த பயணியிடம் இருந்து ரூ. 66.82 லட்சம் மதிப்புள்ள 1,340 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இதேபோன்று, துபையில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகள் இரண்டு பேரிடம் இருந்து ரூ. 27.32 லட்சம் மதிப்புள்ள 548 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்களிடம் விசாராணை நடத்தப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.