கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் இன்றுமுதல் அமல்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் புதன்கிழமைமுதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் புதன்கிழமைமுதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு சென்னை, கடலூா் நாகை, ராமநாதபுரம் , தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் வரை விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை இருந்தாலும், நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள்.
சின்னமுட்டத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் அனைத்து விசைப்படகுகளும் கரைக்குத் திரும்ப வேண்டும் என மீன்வளத் துறை உத்தரவிட்டது. இதனால் விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement