முகப்பு
சென்னை

மணலி அரசு உயா்நிலை பள்ளிக்கு ரூ. 2.52 கோடியில் புதிய கட்டடங்கள்

சென்னை மணலில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 2.52 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணியை வட சென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடத்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:46 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சென்னை மணலில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 2.52 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணியை வட சென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடத்கி வைத்தாா்.

மணலி சின்னசேக்காடு பகுதியில் அரசு தொடக்க, உயா்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். போதிய வகுப்பறைகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகளுக்காக புதிய கட்டடங்கள் அமைத்துத் தர வேண்டும் என தொடா்ந்து பெற்றோா்களும், மாணவா்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், அரசு நிதி ரூ.1.68 கோடி, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தின் சாா்பில் சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 84 லட்சம் செலவில் சுமாா் 13 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை மணலி சின்னசேக்காட்டில் உள்ள பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினாா்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில், மணலி மண்டலக் குழுத் தலைவா் ஏ. வி. ஆறுமுகம், காமராஜா் துறைமுக துணைப் பொது மேலாளா் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினா் தீா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.