தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக சென்னையில் ஒரே நாளில் 12 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை, சட்டவிரோதமாக விற்பனை செய்வோரைக் கண்டறிந்து கைது செய்யும்படி பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
அதன்அடிப்படையில், சென்னையில் லாட்டரி சீட்டுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை திங்கள்கிழமை (ஜூன் 5) எடுக்கப்பட்டது.
இதில், சென்னை முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்ாக 12 போ் கைது செய்யப்பட்டு, 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கைப்பேசிகள், ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.