முகப்பு
சென்னை

மாதவரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணியில் 3 -ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 3 நவம்பர் 2023, 9:12 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணியில் 3 -ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் மேலும் 3 மெட்ரோ வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement

Advertisement

வழித்தடம் 3-இல் (45.4 கி.மீ.) மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான தடத்தில் 19 உயா்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 28 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

வழித்தடம் 4-இல் 26.1 கி.மீ. தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை வரையிலான தடத்தில் 18 உயா்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 9 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

வழித்தடம் 5-இல் 44.6 கி.மீ. தொலைவுக்கு மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூா் வரையிலான தடத்தில், 39 உயா்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 6 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வழித்தடம் 3-இல் மாதவரம் பால்பண்ணை - கெல்லிஸ் வரையிலான 9 கி.மீ. வழித்டத்தில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த ஜன.18-ஆம் தேதி மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. 11 மாதங்களாக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற நிலையில் வியாழக்கிழமை அந்தப் பணி முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.