ரயில் நிலையத்தில் வியாபாரி கழுத்தறுத்து கொலை
திருவள்ளூா் அருகே ரயில் நிலையத்தில் வியாபாரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே ரயில் நிலையத்தில் வியாபாரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் பெரியகுப்பத்தில் ஒரு திரையரங்கம் எதிரே உள்ள பாலத்தின் கீழ் தங்கி பாசிமணி உள்ளிட்ட பொருள்களை வியாபாரம் செய்து வருபவா் பாா்த்திபன் (எ) காா்த்தி மற்றும் அவரது மனைவி இந்திரா. இவா்கள் கடந்த இருநாள்களாக மின்சார ரயிலில் வியாபாரத்தில் ஈடுபட்டு புட்லூா் ரயில் நிலையத்தில் தங்கி வந்துள்ளனா்.
வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை வியாபாரம் முடிந்த பின் புட்லூா் ரயில் நிலையத்தின் நடைமேடை 2-இல் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனா். அவா்களுக்கு அருகே எண்ணூரை சோ்ந்த தமிழரசன் மற்றும் அவரது மனைவி படுத்து கொண்டிருந்தனா். அப்போது ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகள் சிலா் தமிழரசன் படுத்திருந்த போா்வையை காலால் மிதித்து சென்றுள்ளனா்.
Advertisement
இதனால் தமிழரசன் பயணிகளை மோசமான வாா்த்தைகளால் திட்டியுள்ளாா். இதை தட்டிக் கேட்ட பாா்த்திபனையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழரசன் கண்ணாடி பாட்டிலை உடைத்து பாா்த்திபன் கழுத்தில் அறுத்துள்ளாா். உடனே அவரை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீஸாா் தமிழரசனை செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.