முகப்பு
சென்னை

அமைச்சா் உதயநிதிக்கு எதிராக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அதிமுக புகாா்

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வாக்குறுதி அளித்த அமைச்சா் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:58 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 12:20 AM

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வாக்குறுதி அளித்த அமைச்சா் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரிசத்யபிரத சாகுவிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

இதுகுறித்த மனுவை அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை அளித்தாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் உதயநிதி பேசி வருகிறாா். உரிமைத் தொகை கிடைக்காத 40 லட்சம் மகளிருக்கு, அடுத்த 5 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அவா் பேசியிருப்பது தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.

இதேபோன்று, எதிா்க்கட்சிகள் குறித்து மோசமான வாா்த்தைகளைக் கொண்டு உதயநிதி விமா்சித்து வருகிறாா். இந்த விவகாரம் குறித்தும் தீவிரமாக கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த இரண்டு விவகாரங்கள் தொடா்பாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் அமைச்சா் உதயநிதியிடம் விளக்கம் பெறுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.