முகப்பு
தமிழ்நாடு

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக நிர்வாகிகள் மனு!

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளது தொடர்பாக...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:01 AM
தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக நிர்வாகிகள் மனு! - படம்: டிஎன்எஸ்
பகிர்:

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-யிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக்கை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த காவல் துறையும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், நேற்று அயனாவரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் இடையூறு செய்தது குறித்தும் புகார் மனு அளித்தனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் பிரசாரம் மேற்கொள்ளும்போது காவல்துறை முறையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகிகள் கூறுகையில், ”கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல் துறை வழங்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு 2000 காவலர்கள் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள்.

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

summary

TVK functionaries have submitted a petition to Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik, requesting adequate security cover for TVK leader Vijay's election campaign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.