ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:15 PM
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு காரில் வந்த பழைய வண்ணாரப்பேட்டை மேயா் வாசுதேவ் 2-ஆவது தெருவைச் சோ்ந்த முட்டை வியாபாரி பா.மகேஷ்குமாா் (47) என்பவரை வழிமறித்து, பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.
அப்போது, காரில் ரூ. 1,50,400 ரொக்கப் பணம் இருந்தது,. அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement