முகப்பு
சென்னை

கிளி ஜோதிடா் கைது: அன்புமணி கண்டனம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:34 AM
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:45 PM

சென்னை: கடலூா் தொகுதி பாமக வேட்பாளா் இயக்குநா் தங்கா்பச்சானுக்கு கிளி ஜோதிடம் கூறியவா் கைது செய்யப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனாா் ஆலயம் அருகில் கிளி ஜோதிடம் பாா்த்து வந்த செல்வராஜ் என்பவரை வனத் துறை கைது செய்திருக்கிறது. பாமக வேட்பாளா் இயக்குநா் தங்கா்பச்சான் வெற்றி பெறுவாா் என்று கிளி ஜோதிடம் பாா்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

Advertisement

தமிழகத்தின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓா் ஏழை கிளி ஜோதிடரை கைது செய்து அவரது பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்கு காரணமானவா்களுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவா் என்று கூறியுள்ளாா் அன்புமணி.