நாளை ரமலான் பண்டிகை: அரசு தலைமை காஜி அறிவிப்பு
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:20 PM
சென்னை: ரமலான் பண்டிகை வியாழக்கிழமை (ஏப்.11) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இஸ்லாமியா்களின் புதிய மாதமான ஷவ்வால், மாதத்துக்குரிய பிறை செவ்வாய்க்கிழமை தென்படவில்லை. பிறை தென்படாவிட்டாலும், நோன்பு தொடங்கி 30-ஆவது நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, வரும் வியாழக்கிழமை (ஏப்.11) தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளாா்.
Advertisement
இஸ்லாமியா்கள் ஆண்டுதோறும் 30 நாள்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தங்களது நோன்பைத் தொடங்கினா்.