முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 ரமலான் பண்டிகை கொண்டாட்டம்...

Updated On : 19 மார்ச், 2026 at 2:34 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழநாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்.18 அன்று மாலை தென்பட்டது. இதனால், பிப்.19 முதல் ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது.

இந்த நிலையில், ஹிஜ்ரி 1447 ரமலான் மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் மார்ச் 19 மாலை ஷவ்வால் மாத பிறை தென்படாததால், வரும் சனிக்கிழமை (பிப். 21) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் வரும் மார்ச் 21 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்ப்டும் என புதுச்சேரி அரசின் தலைமை காஜி இசூதீ பாகவி தெரிவித்துள்ளார்.

summary

It has been announced that the festival of Ramadan will be celebrated on March 21 in Tamil Nadu and Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.