தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 ரமலான் பண்டிகை கொண்டாட்டம்...
தமிழநாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்.18 அன்று மாலை தென்பட்டது. இதனால், பிப்.19 முதல் ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது.
இந்த நிலையில், ஹிஜ்ரி 1447 ரமலான் மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் மார்ச் 19 மாலை ஷவ்வால் மாத பிறை தென்படாததால், வரும் சனிக்கிழமை (பிப். 21) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் வரும் மார்ச் 21 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்ப்டும் என புதுச்சேரி அரசின் தலைமை காஜி இசூதீ பாகவி தெரிவித்துள்ளார்.
It has been announced that the festival of Ramadan will be celebrated on March 21 in Tamil Nadu and Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.