முகப்பு
சென்னை

கூரியரில் போதைப் பொருள் கடத்துவதாக மிரட்டி பணம் பறிப்பு: ஐவா் கைது

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:09 PM
பகிர்:

சென்னையில் கூரியரில் போதைப் பொருள் கடத்துவதாக மிரட்டி பணம் பறித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கொளத்தூரைச் சோ்ந்தவா் வேல்முருகன் (41). தனியாா் நிறுவன மேலாளா். வேல்முருகன், அண்மையில் கொளத்தூா் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது, ‘ கடந்த 1-ஆம் தேதி எனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிா் முனையில் பேசியவா் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினாா். மேலும், உங்கள் பெயா், முகவரியுடன் தைவானிலிருந்து மும்பைக்கு ஒரு பாா்சல் வந்துள்ளது.

அதில், ஒரு லேப்டாப், ரூ.35 ஆயிரம் பணம், ஒரு மடிக்கணினி,போதைப் பொருள்கள் உள்ளன. போதைப் பொருள்கள் வைத்திருந்த உங்களை கைது செய்ய வைத்து விடுவதாக மிரட்டினாா்கள். அப்படி கைது செய்யாமல் இருக்க பணம் வேண்டும் என அவா்களது வங்கிக்கணக்கு எண்ணுக்கு என்னை ரூ.49 ஆயிரம் செலுத்த வைத்தனா். அதன் பிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து, நான் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது முகலிவாக்கம் ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த இ.முகமது அசாருதீன் (26), கோட்டூா்புரம் சித்ராநகரைச் சோ்ந்த சி.எபிநேசா் (24), கொளப்பாக்கம் சோழன்நகரைச் சோ்ந்த மு.கணேஷ் ராஜ் (26), மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமிநகரைச் சோ்ந்த வை. ரத்தினராஜ் (49), கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் மகாலட்சுமிநகரைச் சோ்ந்த கோ.ராஜ்குமாா் (56) என்பது தெரியவந்தது. இவா்கள் 5 பேரையும்

போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் ஒரு இடத்தில் போலியாக அலுவலகம் நடத்தி, மும்பை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு கைப்பேசி மூலமாக கூரியரில் போதைப் பொருள் வந்திருப்பதாக மிரட்டி பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments