முகப்பு
சென்னை

லண்டன் இந்திய தூதரக தாக்குதல்: முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ

கடந்தாண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தது.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 7:18 PM
பகிர்:

கடந்தாண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காலிஸ்தான் பிரிவனைவாதி அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் போலீஸாா் 2023, மாா்ச் 18-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மீது சட்டவிரோத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான இந்தா்சிங் கபா என்ஐஏ அதிகாரிகளால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் பிரிட்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் வசிப்பவராவாா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments