ஆடிப்பெருக்கு: நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்
ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை (ஆக.3) தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை (ஆக.3) தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்ட அறிவிப்பு:
சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புகின்றனா். அதன்படி, ஆடிப்பெருக்கு தினமான சனிக்கிழமை (ஆக.3) ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் இயங்கும்.
ஆவணப் பதிவு முடியும் வரை திறந்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள கட்டணம் சோ்த்து வசூலிக்கப்படும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.